வேலூர் மாநகராட்சி கவுன்சிலரான கல்லூரி மாணவி
வேலூர் மாநகராட்சியின் மிகவும் இளம் வேட்பாளராக திமுக சார்பில் களம் இறங்கிய கல்லூரி மாணவி மம்தா குமார் வெற்றி பெற்றார்.
வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில் திமுக சார்பில் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவி மம்தா குமார் போட்டியிட்டார். மாநகராட்சி தேர்தலில் போட்டி யிடும் மிகவும் இளம் வேட்பாளர் என்பதால் அவரது வார்டில் திமுகவினர் கூடுதல் கவனத்துடன் வாக்குகள் சேகரித்தனர். 28-வதுவார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் திமுகவின் இளம் வேட்பாளர் மம்தா குமார் வெற்றி பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cupaOvP
via
No comments