பெண்கள் பாதுகாப்பு வசதியுடன்500 அரசுப் பேருந்துகள் இயக்கம் - சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்ட 500 பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
போக்குவரத்துத் துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்துக்காக ‘நிர்பயா’ பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2,500 மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/itjKbwp
via
No comments