நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஒரே கல்லால் செய்யப்பட்ட 32 அடி உயர விஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேய சுவாமி அருள்பாலிக்கிறார். இவருக்கு சாற்றப்படும் வடைமாலை விசேஷமானது. இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/abc7y6A
via
No comments