மக்கள் நம் மீது வைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் - துறை செயலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் நம் மீது வைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். திட்ட செயல்பாடுகளில் கள ஆய்வும், மக்களின் கருத்தை அறிதலும் மிக முக்கியம் என்று துறை செயலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு துறைகளின்கீழ் அரசு வெளியிட்ட அறிவிப்புகளின் செயல்பாடுகள், அவற்றின் தற்போதைய நிலை குறித்து துறை செயலாளர்களுடனான 2 நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் நாள் ஆய்வுக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர் உதயச்சந்திரன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WejrEGJ
via
No comments