சென்னையில் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம்: அமைச்சர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணைந்து சிறப்பு ஓட்டத்தை நேற்று சென்னையில் நடத்தியது. சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்துகாலை 7 மணிக்கு தொடங்கிய இந்தசிறப்பு ஓட்டம் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7zURviq
via
No comments