Breaking News

`செஸ் ஒலிம்பியாட்' | போட்டியாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வரும் 28 முதல் ஆக.10-ம் தேதி வரை 44-வது செஸ் ஒலியம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை, விமானநிலைய முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதி, தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/diG3Cq6
via

No comments