Breaking News

ரிஷிவந்தியம் | நில அபகரிப்பு புகாரளித்த பெண்ணிடம் திமுக கவுன்சிலர் அத்துமீறியதாக குற்றச்சாட்டு

ரிஷிவந்தியம்: நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாக ரிஷிவந்தியம் திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், இவரது சொந்த ஊரான சுத்தமலை கிராமத்தில் உள்ள வீட்டில் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் அவரின் தம்பி மனைவி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு நடவு செய்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுடைய நிலத்தை ரிஷிவந்தியம் ஒன்றிய திமுக கவுன்சிலரான ஏசுராஜ் என்பவர் அபகரிக்க முயன்றதாகவும், விளைநிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பு பயிர்களை அடியாட்கள் துணையுடன் தனது பெயரில் மூங்கில்துறைப்பட்டு கரும்பு ஆலைக்கு அனுப்பி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாகவும் ஆண்ட்ரூ வின்சென்ட் குடும்பத்தினர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O0vlxFX
via

No comments