Breaking News

மாணவி சத்யாவுக்கு நடந்த துயரம் இனி எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் மாணவி சத்யாவுக்கு நடந்ததுயரம் இனி எந்தவொரு பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. அதற்கேற்ப இளைஞர்களை, பிற உயிரை மதிக்கும் பண்பு மிக்கவர்களாக பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்து வளர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 389 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இம்முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2DucFxf
via

No comments