Breaking News

வாடகைத் தாயை வணிகமாக்குகிறதா கருத்தரிப்பு மையங்கள்?

சென்னை: சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் வணிக ரீதியாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் போக்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் வாடகைத் தாய்மார்கள் ஏராளமானோர் வீடு எடுத்து தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம்தேதி நடந்தது. இந்நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் கடந்த 9-ம்தேதி ட்விட்டரில் தெரிவித்தார். திருமணமான நான்கே மாதங்களில் குழந்தை பிறந்ததால், அவர்கள் வாடகைத் தாய்மூலம் குழந்தை பெற்றதாக கூறப்பட்டது. இந்தியாவில் வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறைக்கு தடை உள்ள நிலையில், அவர்கள் விதிகளை மீறியதாகவும் விமர்சனம் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sr1xz0l
via

No comments