Breaking News

ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வெல்வது யார்? - தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி இன்று மோதல்

புதுடெல்லி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் லக்னோவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. இந்த ஆட்டத்தில் 279 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரது அபாரமான பேட்டிங்கால் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7XPbIV9

No comments