Breaking News

துணைப் பொதுச் செயலராக நியமனம்; அப்பா இடத்தில் அண்ணன் ஸ்டாலின்: பொதுக்குழுவில் கனிமொழி உருக்கம்

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலர்கள் 5 பேரில், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மற்றொரு துணைப் பொதுச் செயலரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகிய நிலையில், அந்தப் பதவி காலியாக இருந்தது.இதையடுத்து, திமுக மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியை துணைப் பொதுச் செயலராக நியமித்துள்ளதாக நேற்று பொதுக்குழுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, பொதுக்குழுவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: திமுக தொடங்கப்பட்டபோது, பெரியாருக்கும் நமது தலைவர்களுக்கும் இருந்த சிறிய இடைவெளி, அண்ணாவுக்கு உறுத்தலாக இருந்தது. நாம் இயக்கத்தை நடத்தும்விதம் பெரியாரை ஆறுதல்படுத்தக்கூடியதாகவும், அவர் போற்றக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றார் அண்ணா. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, சுயமரியாதை திருமணத்தைச் சட்டமாக்குதல், தமிழ்நாடு என்று பெயர் சூட்டுதல் உள்ளிட்டவை மூலம் பெரியார் பாராட்டக்கூடிய ஆட்சியாக அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pgNzSuG
via

No comments