Breaking News

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு | 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் என்ஐஏ விசாரணை

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக நேற்று 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், தமிழக காவல் துறை சார்பில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில், ஜமேஷா முபின் 3 சிம்கார்டுகளைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே அக். 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அக்டோபர் 27-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N7ms4KT
via

No comments