Breaking News

‘மேன்டூஸ்' புயல் | சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்

சென்னை: புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்கள், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் இருந்தாலும், பேரிடர் மீட்புக்கான பயிற்சி பெற்ற மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அவசியம் என கருதி அவர்களும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jVOZqFE
via

No comments