Breaking News

மாநகராட்சி, நகராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் எல்இடி விளக்குகள்? - அரசிடம் புதிதாக மனு அளிக்க உத்தரவு

மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் திட்டத்தை நமக்கு நாமே திட்டத்தில் செயல்படுத்தக்கோரி அரசிடம் புதிதாக மனு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் முதுகுளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சங்கரபாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் 11 மாநகராட்சிகள், 87 நகராட்சிகளில் தற்போதுள்ள 3,00,796 தெரு விளக்குகளை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக எல்இடி விளக்குகள் பொருத்த நகர்ப்புற வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.342.85 கோடி கடன் வாங்குமாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 14.10.2022-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த கடனை 6 ஆண்டில் 5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். இந்த அரசாணைப்படி ஒரு உள்ளாட்சி அமைப்பு ரூ.2 கோடி கடன் வாங்கினால், ரூ.2.70 கோடி திரும்ப செலுத்த வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nV6btg1
via

No comments