Breaking News

காசோலை மூலம் சொத்துவரி செலுத்த 4 இடங்களில் தானியங்கி இயந்திரங்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் ரூ.1,400 கோடி சொத்துவரி வசூலாகிறது. சொத்துவரி மாநகராட்சியின் முக்கிய நிதி ஆதாரமாகவும் விளங்குகிறது.

சொத்து வரியை www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம் வழியாக, எவ்வித பரிமாற்ற கட்டணமும் இல்லாமல் செலுத்தலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் நேரடியாக செலுத்தலாம். ‘நம்ம சென்னை’ மற்றும் ‘பேடிஎம்’ ஆகிய கைபேசி செயலி வழியாகவும், மண்டலம் மற்றும் வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களிலும் சொத்துவரியை செலுத்தலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rE86CDA
via

No comments