Breaking News

ராமேசுவரம், ஸ்ரீரங்கம், குமரியில் ஆயிரக்கணக்கானோர் தை அமாவாசையையொட்டி புனித நீராடல்

ராமநாதபுரம்/திருச்சி/ நாகர்கோவில்: தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், குமரி முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி, தை அமாவாசை நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் அளிப்பது அவர்களது ஆன்மாக்களுக்கு செய்யும் கடமையாகும் என்பது ஐதீகம். அந்த வகையில், தை அமாவாசையான நேற்று, புண்ணியத் தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழகம், வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கூடினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/od8QrUD
via

No comments