Breaking News

‘அமிர்த்’ திட்டத்தில் மேலும் 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் - மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

மதுரை: ‘அமிர்த் பாரத்’ திட்டத்தில் மேலும், 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே திட்டம் குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்பநாபன் அனந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய அரசின் ‘அம்ரித் பாரத் ’ திட்டத்தின்படி பல்வேறு ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றது. இதன்படி, அம்பாசமுத்திரம், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புனலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், சோழவந்தான், திருவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், விருதுநகர் ஆகிய 15 ரயில் நிலையங்களில் தேவையற்ற கட்டிடங் கள் இடித்தல், பிளாட்பாரம் உயரமாக்குதல், பயணிகள் உள்ளே, வெளியே செல்லும் நடைபாதைகள், பார்க்கிங், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி உட்பட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6hgl83p
via

No comments