Breaking News

டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி: ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி

அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி தொடரை வென்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. உஸ்மான் கவாஜா 180, கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 178.5 ஓவர்களில் 571 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 128,விராட் கோலி 186, அக்சர் படேல் 79 ரன்கள் விளாசினர். ஆஸ்திரேலிய அணி சார்பில் நேதன் லயன், டாட் மர்பி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zEQG1go

No comments