Breaking News

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - இறுதி சுற்றில் நீது, நிகத் ஜரீன்

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் உள்ள கே. டி. ஜாதவ் அரங்கில் நடைபெற்ற வருகிறன்றன. இதில் அரையிறுதிச் சுற்றுக்கு பல்வேறு பிரிவுகளில் 19 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் சீனா மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர் (முறையே 7,6). அடுத்த இடத்தில் இந்தியாவும் கொலம்பியாவும் உள்ளன (இவை ஒவ்வொன்றிலிருந்தும் நான்கு வீராங்கனைகள்).

இதில் 48 கிலோ எடை பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் நீது, கஜகஸ்தானைச் சேர்ந்த அலுவா பல்கிபெகோவா என்பவரைக் களத்தில் சந்தித்தார். இதில் நீது 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சனிக்கிழமை நடைபெறும் இறுதி சுற்றில் நீது, 2022-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மங்கோலியாவின் லுட்சைகான் அல்டன் செட்செக்குடன் மோதுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l9gNsU5

No comments