Breaking News

பணியாளர்கள் பற்றாக்குறையால் மதுரையில் ‘நடத்துனர் இல்லா’ பேருந்துகள்: ஆளும்கட்சி ஊழியர்கள் மீது சிஐடியு புகார்

மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையத்திற்கு அதிகளவில் ‘நடத்துனர் இல்லா’ பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன. இதில் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் ‘ஓபி’ அடிக்காமல் வேலை பார்த்தாலே பணியாளர்கள் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்கலாம் என சிஐடியு தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 15 அரசு போக்குவரத்து கழக டெப்போக்கள் மூலம் 900க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறையால் ஒரு டெப்போவுக்கு குறைந்தது 30 பேருந்துகள் இயக்கமுடியாமல் நிறுத்தப்படுகின்றன. ஓட்டுநர்களை விட 100க்கும் மேற்பட்ட நடத்துனர்கள் பற்றாக்குறை உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zqN90wG
via

No comments