Breaking News

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - சிறந்த அணியாக இந்தியா தேர்வு

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளில் இறுதிச் சுற்றின்முதல் போட்டி நிகத் ஜரீனுக்கும் வியட்னாம் வீராங்கனை நிகுயென் தீ தம் என்பவருக்குமிடையே நடைபெற்றது.

முதல் சுற்றில் தொடக்கத்தில் பல நொடிகளுக்கு தன் எதிரியின் உத்திகளை அறிந்து கொள்வதற்காகவே நிகத் செலவிட்டது போல் இருந்தது. முதல் சுற்றில் நிகத்துக்கு ஆதரவாக 5-0 என்ற கணக்கில் முடிவானது என்றாலும் இரண்டாவது சுற்றில் 2-3 என்று முடிவு அவருக்கு எதிராகப் போனது. எனவே மூன்றாவது சுற்று பரபரப்பானது. அதில் சிறப்பாக செயல்பட்ட நிகத் ஜரீன் இறுதியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NrjLcDe

No comments