Breaking News

IPL 2023 | ஆர்சிபியும்.. இறுதிகட்ட பதற்றமும்

பேட்டிங்கில் நட்சத்திர வீரர்களும், அதிரடி வீரர்களும் பலர் இருந்தாலும் 15 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்விகளை பதிவு செய்து 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை ரஜத் பட்டிதாரின் அதிரடி சதத்தால் வீழ்த்தினாலும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் வீழ்ந்தது இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து 4-வது இடத்துடன் வெளியேறியது பெங்களூரு அணி. முதன்முறையாக கோப்பையை கைகளில் ஏந்திவிட வேண்டும் என்ற பேராவலுடன் டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் 2வது முறையாக களமிறங்குகிறது ஆர்சிபி.

இந்த வருடம் புதிது என்ன?: பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக இங்கிலாந்தின் இடது கைவேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லேவை ரூ.1.90 கோடிக்கு வாங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அவினாஷ் சிங் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YGb7FvS

No comments