Breaking News

கள்ளச்சாராய மரணம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்து ஆளுநரிடம் அதிமுக சார்பில் பழனிசாமி புகார் மனு

சென்னை: திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்பட்டது. பின்னர், முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடு குறித்து புகார் மனு அளித்தனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கடந்த2 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KxO4m8C
via

No comments