Breaking News

ஆசய கபப கரககட தடரல ஸரயஸ ஐயர ஜஸபரத பமர வளயட வயபப

புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்தத் தொடரில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும் மீதம் உள்ள 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக நீண்டநாட்களாக ஓய்வில் இருந்து வரும் இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mxZbKRg

No comments