Breaking News

ஆசிய கோப்பை அட்டவணை உறுதியாகிவிட்டது; இந்திய அணி பாக். சென்று விளையாடாது - ஐபிஎல் தலைவர் அருண் துமால் தகவல்

புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறுகிறது. இம்முறை போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை கலப்பின மாதிரி அடிப்படையில் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

இதனை நஜாம் சேதியின் தலைமையின் கீழ் இயங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது. இதன்படி பாகிஸ்தானில் 4 லீக் ஆட்டங்களையும், தொடரின் எஞ்சிய 9 ஆட்டங்களையும் இலங்கையில் நடத்துவது எனமுடிவு செய்யப்பட்டது. ஆனால் இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவராக ஸாகா அஷ்ரப் பொறுப்பேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/183WFah

No comments