Breaking News

100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க ஆயத்தமாகும் தமிழ்நாடு செஸ் சங்கம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் மற்றும் உலகக் கோப்பை செஸ் தொடரில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்த அதிக கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு செஸ் சங்கம் மேற்கொண்டுள்ளது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்றால் முதலில் ஐஎம் (இன்டர்நேஷனல் மாஸ்டர்) ஆக வேண்டும். இதற்கு ஃபிடேவின் 3 நார்ம்ஸ்களை பெற வேண்டும். இதனால் முதற்கட்டமாக தமிழக வீரர்கள் பயன் பெறும் வகையில் ஐஎம் ஆவதற்கான தேவையான நார்ம்ஸ்களை பெறும் வகையில் செஸ் தொடர்களை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகையில் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JiOpmfr

No comments