Tamil News Live Today: திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு!
2020-ம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர்மீது புகார் எழுந்தது. அதனால் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல சட்டவிரோதமாக வெளிநாட்டில் முதலீடு செய்ததாக, அவருடைய ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அதைத் தொடர்ந்து, தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குப் புகார்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அவர் தொடர்புடைய ஹோட்டல், மதுபான ஆலைகள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மட்டுமன்றி, புதுச்சேரியிலும் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
நேற்று இரவு வரை இந்தச் சோதனை நீடித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
from India News https://ift.tt/soOwrdD
No comments