“உலகக் கோப்பையை வென்று வாருங்கள்” - இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா மெசேஜ்

மும்பை: இன்று நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு மெசேஜ் ஒன்றை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சொல்லியுள்ளார். அவர் இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
“இந்த அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இதுவரையிலான நமது செயல்பாட்டுக்கு பின்னால் பல வருட கடின உழைப்பு உள்ளது. சிறு வயதிலிருந்து நாம் கண்ட கனவை மெய்ப்பிக்க இன்னும் ஒரே ஒரு படி தான் உள்ளது. அதை வெற்றிகரமாக கடந்தகால அது சிறப்பானதாக அமையும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6myb2ZG
No comments