தபால் வாக்குக்காக போலீஸார் பணம் பெற்ற வழக்கு; திருச்சி காவல் நிலையங்களில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை: சிசிடிவி கேமரா காட்சி பதிவுகள் சேகரிப்பு
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள திருச்சி மாநகர காவல் துறையினர் நேற்று முன்தினம் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
இதையொட்டி, திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு வழக்கறிஞர் மூலம் பண பட்டுவாடா செய்த புகாரின்பேரில் உறையூர், தில்லை நகர், புத்தூர் அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டி புதூர், கன்டோன்மென்ட், கே.கே.நகர், செசன்ஸ் நீதிமன்றம், பாலக்கரை ஆகிய 8 காவல் நிலையங்களில் காவல் மற்றும் வருவாய் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wciPEj
via
No comments