Breaking News

வேலூர் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: மதுபான பாட்டில்கள், ரசாயனம், ஸ்டிக்கர்கள் பறிமுதல்

வேலூர் அருகே கொலை முயற்சி வழக்கு விசாரணைக்காக சென்ற காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் போலி மதுபானஆலை இயங்கியதை கண்டுபிடித் துள்ளனர். அங்கிருந்து , 430 மதுபானபாட்டில்கள், போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், ஸ்டிக்கர்கள், பாட்டில் மூடிகளையும் பறிமுதல் செய்து தலை மறை வான கட்டிட மேஸ்திரியை தேடி வருகின்றனர்.

வேலூர் அருகே உள்ள சாத்துமதுரை பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ஜெயசித்ரா. இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஜெயசித்ராவின் தம்பி சந்துரு (22) என்பவர் நேற்று முன்தினம் சதீஷ்குமார் வீட்டுக்குச் சென்று தட்டிக்கேட்டார்‌. அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dbeett
via

No comments