Breaking News

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால் சிசிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதி; தமிழகத்தில் படுதீவிரமாக பரவுகிறது கரோனா: தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்தது- பணிச் சுமையால் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பரிதவிப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் படுதீவிரமாகி வருகிறது. தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதால்புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் பணிச் சுமையால் பரிதவிக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கரோனா தொற்றின் 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு12 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 60-ஐ நெருங்கியுள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QPJczI
via

No comments