Breaking News

வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்: பக்தர்கள் வருகையை தடுக்க 144 தடை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல் நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி, செல்வமுத்துக் குமார சுவாமி கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மகா கும்பாபிஷேகம் இன்று (ஏப்.29) நடைபெற உள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், எஸ்.பி ஸ்ரீ நாதா பரிந்துரையின்பேரில், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இன்று (ஏப்.29)) காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஆட்சியர் லலிதா நேற்று உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QE4a52
via

No comments