ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பாளர்கள் மனு: தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துஉள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அளித்த கருத்துகளின் அடிப்படையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gM1w7X
via

No comments