Breaking News

போடியில் துணை முதல்வரின் உதவியாளர் வீட்டில் சோதனை: ரூ.1.50 லட்சத்துடன் முன்னாள் கவுன்சிலர் கைது

தேனி மாவட்டம் போடியில் துணைமுதல்வரின் உதவியாளர் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனைசெய்தனர். வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த அதிமுக முன்னாள் கவுன்சிலரை கைது செய்து ரூ.1.50லட்சத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆண்டிபட்டியில் பிரச்சார வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.28 ஆயிரத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக அதிமுக வேட்பாளர் லோகிராஜன் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தேனி மாவட்டம் போடியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் உட்பட 24 பேர் போட்டியிடுகின்றனர். இருப்பினும் அதிமுக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக திமுகவினர் புகார் கூறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PS6eFN
via

No comments