Breaking News

மகள் வீட்டில் சோதனைக்கு வந்தபோது காபி சாப்பிட்டு, டி.வி பார்த்தனர்: ‘ரெய்டால் திமுகவுக்குதான் கூடுதலாக 25 சீட்’: வருமானவரித் துறையினர் கூறியதாக மு.க.ஸ்டாலின் தகவல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம், கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி, நாகை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ், திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து ஆகியோரை ஆதரித்து, வேதாரண்யம் கடைவீதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர், பணம் என்றால் ஓ.எஸ்.மணியன். பணம் இல்லை என்றால் நோ எஸ்.மணியன். கஜா புயலின்போது, பொதுமக்கள் அவரை விரட்டி அடித்துள்ளனர். இதனால், அமைச்சர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 150 பேர் மீது கொலை முயற்சி, திருட்டு, குண்டர் சட்டம் என பல்வேறு வழக்குகளைப் போடச் செய்திருக்கிறார். இதன் காரணமாக, அவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3up96sT
via

No comments