Breaking News

கரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது: 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல்வர் பழனிசாமி தகவல்

அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது என்றுமுதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி, கரோனா தடுப்பூசி முதல் டோஸ் சென்னையில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். இந்நிலையில், 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர், மருத்துவ குழுவினர் 2-வது டோஸ் கரோனா தடுப்பூசியை முதல்வருக்கு செலுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d64DWg
via

No comments