Breaking News

பேருந்தில் நின்று செல்ல அனுமதிக்கப்படாததால் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டால், அலுவலக நேரத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போக்குவரத்து அதிகாரிகள் தவித்தனர். பேருந்தில் நின்று செல்ல அனுமதிக்கப்படாததால் பல இடங்களில் பயணிகளுக்கும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சனி, ஞாயிறுகளில் கூட்டம் சற்று குறைவாக இருந்ததால், இந்த கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல் இல்லாமல் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d9WU9o
via

No comments