Breaking News

ரூ.2 லட்சம் கள்ளநோட்டு வைத்திருந்தவர் பிடிபட்டார்

காங்கயம் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டு வைத்திருந்தவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே திருப்பூர் சாலை படியூர் சோதனைச் சாவடியில், காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகனப் பதிவு எண் பலகை இல்லாமல், இருசக்கர வாகனம் ஒன்று திருப்பூரை நோக்கிச் சென்றது. அந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அதில் வந்த நபர் வண்டியை திருப்பி தப்பிச் செல்ல முயன்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tg6s8t
via

No comments