பண மதிப்பிழப்பு செய்து 4 ஆண்டுகளாகியும் ஒழியாத பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள்

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் ஒழியவில்லை. இதைப் பயன்படுத்தி தரகர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி 2016 நவ.8-ம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்தார். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து புதிதாக ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பலர் வங்கிகளில் வாரக் கணக்கில் காத்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3smTjte
via
No comments