Breaking News

வேளச்சேரி மேம்பாலப் பணி 4 மாதங்களில் நிறைவு பெறும்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல்

வேளச்சேரி மேம்பாலப் பணிகள் இன்னும் 4 மாதங்களில் நிறைவடையும். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வேளச்சேரியும் ஒன்று. இங்குள்ள பிரதான சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம், வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழி சாலைகளை இணைத்து மேம்பாலம் கட்டப்படும் என்றும், இந்த மேம்பாலத்துடன் வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட நடைபாதை அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2012-ம்ஆண்டு அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32YKGL9
via

No comments