Breaking News

புதுச்சேரியில் அமலுக்கு வந்த கரோனா கட்டுப்பாடுகள்: தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களே அனுமதி

புதுச்சேரியில் கரோனா தடுப்புக்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது. தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் கரோனா தாக்கத்தின் 2-வது அலை பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ள அம்மாநில அரசு, இதை மீறினால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என பொதுமக்களை எச்சரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g20xjE
via

No comments