Breaking News

கரோனா அதிகரித்து வரும் சூழலில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள்: தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிமற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் மாவட்டதேர்தல் அதிகாரிகள் காணொலிவாயிலாக பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பிஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஹெச்.ஆர்.சீனிவாசா, இந்திய தேர்தல் ஆணைய செயலர் மதுசூதன் குப்தா, பார்வையாளர் விபின் கட்டாரா ஆகியோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gnzShz
via

No comments