Breaking News

தி.மலை மாவட்டத்தில் தீவிரமடையும் கரோனா பாதிப்பு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், மருத்துவ மனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் 44 பேருக்குதொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், மொத்த பாதிப்பு என்பது 19,883-ஆக இருந்தது. இதில், 19,408 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அன்றைய காலக்கட்டத்தில் 188 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dStFIs
via

No comments