Breaking News

கரோனா தடுப்பு பணியில் மீண்டும் களமிறங்கிய காவல் துறை

கரோனா தடுப்புப் பணியில் போலீஸார் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். முகக்கவசம் அணியாமல் சாலையில் செல்பவர்கள், வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

கரோனா தடுப்புப் பணியில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் காவல்துறையினரும் ஒருங்கிணைந்து முன்கள வீரர்களாக பணியாற்றி வந்தனர். இதன் காரணமாக கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. முழு ஊரடங்கும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. காவல்துறையினர் தங்களின் வழக்கமான பணிகளுக்குத் திரும்பினர். இதையடுத்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவும் நிறைவடைந்தது. போலீஸார் தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு, கண்காணிப்பு பணிகளில் முழு அளவில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mxWzjS
via

No comments