கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் உடலை தோண்டி எடுத்து கல்லறையில் அடக்கம் செய்யலாம்: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்றபோது அப்பகுதி மக்கள் மறித்து, தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அவரது உடலை அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்தனர். இதற்கு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக ஏராளமானோர் மீது டி.பி.சத்திரம், அண்ணா நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வழக்கு நிலுவையில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PNglMc
via
No comments