வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள வளாகத்தில் மடிக்கணினியுடன் நுழைந்த பேராசிரியர்கள் வெளியேற்றம்: மதுரை அருகே திமுக வேட்பாளர்கள் அளித்த புகாரால் நடவடிக்கை

மதுரை அருகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மடிக்கணினியுடன் சென்றபேராசிரியர்கள், திமுக வேட்பாளர்களின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டனர்.
மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகேயுள்ள கீழக்குயில்குடியில் அண்ணா பல்கலைக்கழக மதுரை மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்குப் பாதுகாப்பு மற்றும் கட்சியினரின் கண்காணிப்புடன் இந்த வளாகம் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dondZv
via
No comments