Breaking News

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா பரவல் - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை கள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரி களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் கடந்த மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பரவல் 6 ஆயிரத்தை தொட்டது. கரோனாவால் உயிரிழப்பும் தினமும் 20-ஐ தாண்டியுள்ளது. அரசின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, மாநிலத் தில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக் கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட வர்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்தபோது படுக்கை வசதி களுடன் பல்வேறு கரோனா கேர் மையங் கள் உருவாக்கப்பட்டன. அதேபோல இப்போதும் கரோனா மையங்கள் உரு வாக்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/325O5al
via

No comments