Breaking News

தேர்தல் வெற்றிக்காக நூதன பிரார்த்தனை; திருத்தணி முருகன் கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச் சென்ற திமுகவினர்

திருத்தணி தொகுதியில் திமுக வெற்றி பெறுவதற்காக அக்கட்சியினர், திருத்தணி முருகன் கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச் சென்று, பிரார்த்தனை செய்தனர்.

திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக-அதிமுக கட்சிகள் நேரடியாகப் போட்டியிடுகின்றன. இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுவதால், திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தொகுதி முழுவதும் சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3meh19o
via

No comments