Breaking News

கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் வழிபாடு: முகக்கவசம் அணிந்து பக்தர்கள் தரிசனம்

தமிழ்ப்புத்தாண்டு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு தங்க கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலின் காரணமாக அரசு உத்தரவின் பேரில் முகக்கவசம் அணிந்த பக்தர்களுக்கு மட்டுமே கோயிலின்உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படவில்லை. கரோனா முன்தடுப்பு நடவடிக்கையால் நேற்று பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wPOpIq
via

No comments