ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 15 டன் வரை ஆக்சிஜன் விநியோகம்: உற்பத்தி அளவை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஸ்டெர்லைட் வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் சீரமைக்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்திக்கு தயார் செய்யப்பட்டது. கடந்த 12-ம்தேதி இரவு உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் திரவ ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wnrLWV
via
No comments